உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விபரீதம் ஆனது- ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் 6-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2023-03-30 12:05 IST   |   Update On 2023-03-30 12:05:00 IST
  • கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார்.
  • பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாமல்லபுரம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கமால். இவர் கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் லவ்லி(வயது11). கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார். அப்போது அதன் கயிறு மாணவியின் கழுத்தை இறுக்கி அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லவ்லி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சதுரங்க பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News