உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்

Published On 2024-03-23 04:57 GMT   |   Update On 2024-03-23 04:57 GMT
  • முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
  • பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் நிலைய சோதனை சாவடி அருகே நேற்று இரவு பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி வந்த முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கேரளாவில் முட்டைகளை விற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாய் லாரியில் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என லாரி டிரைவர் திண்டமங்கலம் அருகே உள்ள பெரியகவுண்டமா பாளையத்தை சேர்ந்த நாகராஜனிடம் கேட்டனர்.

அதற்கு அவர் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து அந்த பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News