உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-27 04:10 GMT   |   Update On 2022-09-27 04:10 GMT
  • செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு செல்வக்குமார் திடுக்கிட்டார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமா தேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். முந்திரி விவசாயி. இவர் நேற்று கீழ்தளத்தில் உள்ள வீட்டு கதவை காற்றுக்காக திறந்து வைத்தார். பின்னர் குடும்பத்துடன் மாடியில் தூங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடி கொண்டு தலைமறைவானார்கள். இன்று காலை எழுந்து வந்த செல்வக்குமார் வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News