உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-08-26 15:26 IST   |   Update On 2022-08-26 15:26:00 IST
  • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் விரட்டி பிடித்தனர்.
  • 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர், வானகரம் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் விரட்டி பிடித்தனர். அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த விஜய குமார், ஜெகதீசன், அறிவழகன் ஆகியோர் என்பதும், அம்பத்தூர் வானகரம் சாலை, மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News