உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 6 ஆண்டுகளாக பாஸ்போர்ட்-விசா இல்லாமல் தங்கி இருந்த 2 நைஜீரிய வாலிபர்கள் கைது

Published On 2022-09-07 05:35 GMT   |   Update On 2022-09-07 05:35 GMT
  • போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது.
  • திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் பகுதியில் பாஸ்போர்ட்-விசா போன்ற முறையான ஆவணங்கள் இன்றி 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மைக்கேல் (39), டேஸ்மாண்ட் (36) என்பதும் பாஸ்போர்ட், விசா இன்றி கடந்த 6 வருடமாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News