உள்ளூர் செய்திகள்

கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை- ஆந்திரா வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2023-09-11 10:37 GMT   |   Update On 2023-09-11 10:37 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போரூர்:

சென்னை கே.கே நகர் பொப்பிலி ராஜா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கணேஷ் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து அவரது தந்தை காவலாளியாக வேலை பார்த்து வரும் கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News