உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-08 09:33 GMT   |   Update On 2023-02-08 09:33 GMT
  • நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும்.
  • உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுக்களின் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுபயிர்க்காப்பீட்டுடன் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும். உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்ஜோசப் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்சந்திரராமன், ஒன்றிய செயலாளர்ஜவகர் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ஜெயபால், ஒன்றிய தலைவர்பாலு, நகர செயலாளர் டி.பி.சுந்தர், நகர தலைவர் பி.எம்.பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News