பாளை புஷ்பலதா பள்ளியில் திறமை தினவிழா
- 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.
- ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
நெல்லை:
பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி புற்றுநோயியல் மருத்துவர் பிரபுராஜ், அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் பிரான்சிஸ் ராய் மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மருத்துவர் எழில் ரம்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
3-ம் வகுப்பு மாண வர்கள் `பொம்மைகளின் உலகம்' என்ற தலைப்பிலும், 4- ம் வகுப்பு மாணவர்கள் `தாமிரபரணியின் வழித்தடங்கள்' என்ற தலைப்பிலும், 5-ம் வகுப்பு மாணவர்கள் `நாகரீகம்' என்ற தலைப்பிலும் ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
பல்வேறு நாட்டின் பொம்மைகள், தரணி பாயும் நெல்லையின் சிறப்புகள் மற்றும் பல்வேறு நாட்டின் நாகரீக வளர்ச்சிகளை காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் விதமாக அமைந்தது. பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், நிர்வாக இயக்குநர் டாக்டர் மரகதவல்லி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.