தையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- வெங்கடேசன் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது42). டைலரான இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று மீண்டும் அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த காணப்பட்ட வெங்கடேசன் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா பாரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.