உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய தேனி பெட்டிகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

விவசாயிகளுக்கு தேனி பெட்டிகள் வழங்கல்

Published On 2023-05-20 09:48 GMT   |   Update On 2023-05-20 09:48 GMT
  • தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனி பெட்டிகள்.
  • ரூ.4 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 2 தேனி பெட்டிகள் வீதம் தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் (ரூ.3 ஆயிரத்து 200) மானியத்துடன் கூடிய தேனி பெட்டிகளை விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

அருகில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News