உள்ளூர் செய்திகள்

அரசு உதவிபெறும் பள்ளிக்கு நிதிஉதவி வழங்கப்பட்டது.

பாபநாசம் அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Published On 2023-03-18 09:16 GMT   |   Update On 2023-03-18 09:16 GMT
  • ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் தீயணைப்பு கருவியையும் வழங்கினார்.
  • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு நம்ம ஸ்கூல் வளர்ச்சி திட்டத்தின்கீழ் நிதி உதவி மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க கண்ணதாசன் கலந்து கொண்டு வெங்காய களஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரி வேளூர் சரஸ்வதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சி நிதியாக தலா 10 ஆயிரம் ரூபாயையும், ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் தீயணைப்பு கருவியையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்க தலைவர் தேவராஜன், சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார், வெங்காய–களஞ்சேரி தொடக்கப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி, ஏரி வேளூர் உதவிபெறும் தொடக்கப்–பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரிசாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News