உள்ளூர் செய்திகள்

வட்டன்விளை கோவிலில் நேற்று இரவு சுமங்கலி பூஜை நடந்த காட்சி.

பரமன்குறிச்சி வட்டன்விளை கோவில் கொடை விழாவில் சுமங்கலி பூஜை

Published On 2022-11-09 08:30 GMT   |   Update On 2022-11-09 08:30 GMT
  • கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
  • விழாவில் சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

மறுநாள் இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் தெருபவனி நடந்தது.

நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளத்துடன் பவனி வந்து கோவிலை அடைந்ததும், பின்பு சுவாமிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜையுடன் சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடந்தது.

இன்று நண்பகல் 1 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்டபூஞ் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் கொடுத்தல், நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கலக்கல் கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News