உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் திடீர் முற்றுகை

Published On 2023-09-16 10:41 IST   |   Update On 2023-09-16 10:41:00 IST
  • கடந்த சில மாதங்களாக குடிநீர், சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை
  • கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரி தெரிவித்தவுடன் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செம்பட்டி:

செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர், சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பலமுறை யூனியன் அதிகாரிகள் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு, கிருஷ்ணா நகர், மல்லையாபுரம் காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டனர். பின்னர் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தங்கள் பதவிக்கு விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிகாரி தெரிவித்தவுடன் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News