உள்ளூர் செய்திகள்
- பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி :
அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அவினாசி செங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அங்கப்பன் (வயது 50) என்பதும் குடிப்பழக்கம் உள்ள அவர் போதையில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.