உள்ளூர் செய்திகள்

வயல்களில் வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நேரடி நெல் விதைப்பில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து ஆய்வு

Published On 2022-06-29 09:18 GMT   |   Update On 2022-06-29 09:18 GMT
  • வெட்டுகிளிகள் கோடை காலங்களில் பயிர் இல்லாததால் உணவுக்காக வரப்புகளிலும் மற்றும் வயல் ஓரங்களிலும் உள்ள கலைகள் மற்றும் புதர்களில் தங்கியிருக்கும்.
  • பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் மருந்துகள் 400 மி.லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது இவ்வருடம் சுமார் 12500 ஏக்கரில் குறுவை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்க ளில் ஆற்று நீரைப் பாய்ச்சி நெல் முளைத்து விடுகிறது இந்நிலையில் முளைத்து வரும்இளம் குருத்துக்களை வெட்டுக்கிளிகள்சேதப்படு த்தியதாக விவசாயி களிடமிருந்து தகவல் கிடைத்ததால் உடனடியாக வேளாண்மைத் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தெரிவித்ததன் அடிப்ப டையில் நிலையத்தின் தலைவர் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள திருவலஞ்சுழி விளக்குடி மற்றும் கிரக்களூர் கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உடன் இருந்தார் வெட்டுக்கிளியின் தாக்குதல் தென்படுகிறது வெட்டு கிளிகள் கோடை காலங்களில் பயிர் இல்லா ததால் உணவுக்காக அவைகள் வரப்புகளிலும் மற்றும் வயல் ஒரங்களிலும் உள்ள கலைகள் மற்றும் புதர்களில் தங்கியிருந்து சரியான காலத்திற்காக காத்திருக்கும் தற்சமயம் நேரடி தெளிப்பு செய்யப்பட்ட பயிர்கள் முளைத்து வெளிவரும் தருணத்தில் இளம் குருத்துகளை சேத படுத்துகிறது

இதனால் விவசாயிகள் அச்சம் கொள்ளத்தேவை யில்லை வயலில்விளக்குப் பொறிகள் வைத்துகண்கா ணிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்கா ணிக்க முடியும்

இவைகளின் மூலம் பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்க முடியும் விவசாயிகள் பயிரில் வெட்டுக்கிளி தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை 400 மி.லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் வயல் ஓரங்களிலும் வரப்புகளிலும் உள்ள புல் பூண்டுகள் புதர்கள் குப்பை குளங்களில் மருந்து அடிக்க வேண்டும் பிரபனோ பாஸ் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 மில்லி இதில் ஏதாவது மருந்தை தெளிக்கவும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News