காந்தி கிராம பல்கலைக்கழகம்
காந்திகிராம பட்டமளிப்பு விழா உரிய சான்று இல்லாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிய மாணவர்கள்
- பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் அனைவரது மின்னஞ்சல் முகவரிக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
- ஆவணங்கள் இன்றி வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர்.
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று 2314 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு அந்தந்த துறை தலைவர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் அனைவரது மின்னஞ்சல் முகவரிக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பலரது மின்னஞ்சல் முகவரிக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆவணங்கள் இன்றி வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர். கொட்டும் மழையில் விழாவிற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.