உள்ளூர் செய்திகள்

தாழங்காடு கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே மழைக்கு ஒழுகும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்

Published On 2022-11-05 07:29 GMT   |   Update On 2022-11-05 07:29 GMT
  • கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
  • இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இந்த பகுதியை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பெரும்பாலா னோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்பொழுது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்து விட்டது.  இது குறித்து அப்பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-

பழுதான இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அமைச்சர்கள் வரை கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.  இதுபோல் மழை நீர் ஒழுகுவதால் பள்ளியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News