உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை குவித்த நேரு ரைபிள் கிளப் மாணவர்கள்-கலெக்டர் பாராட்டு

Published On 2022-08-10 09:17 GMT   |   Update On 2022-08-10 09:17 GMT
  • தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.
  • கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.

கோவை:

கோவை நேரு ரைபிள் கிளப்பை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் டுவிங்கிள் யாதவ் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவி பிரீத்தி மாஸ்டர் உமன் பிரிவில் தங்கப்பதக்கமும் மற்றும் ஜெய்கிஷோர் தங்கப்பதக்கமும், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கமும் வென்றனர். சஜய் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார்.

மாணவி ஸ்வர்ணலதா தங்கப்பதக்கமும், வெள்ளி பதக்கத்தையும், மாணவி பிரியதர்ஷினி வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். மொத்தம் 4 தங்கப்பதக்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

இவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.

அப்போது நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணகுமார் மற்றும் செயலார் எஸ். அஜய் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News