உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2023-02-08 13:19 IST   |   Update On 2023-02-08 13:19:00 IST
  • பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

பல்லடம் :

பல்லடம் - உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் பிரிவில் சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் இன்று காலை சரியான நேரத்திற்கு இயக்கப்படாத அரசு நகர பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News