உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம்- தனியார் பள்ளி முற்றுகை

Published On 2023-07-10 06:39 GMT   |   Update On 2023-07-10 06:39 GMT
  • பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது.
  • பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Tags:    

Similar News