உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-05-20 07:26 GMT   |   Update On 2023-05-20 07:26 GMT
  • நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
  • இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம். சேவகனுர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். சரண்யா தம்பதியரின் மகன் திருபன் (15) என்பவர் கே ஆர் தோப்பூர் அரசு மேல்நிலைபள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது பெற்றோர் வெளி யில் சென்று விட்டதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தாய் உள்ளே சென்ற போது மாணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்ச லிட்டுள்ளார் .இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News