உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்ற காட்சி

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்

Published On 2022-06-27 06:58 GMT   |   Update On 2022-06-27 06:58 GMT
  • தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
  • தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார். கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா க.மனோகரன், சாமளாபுரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் ராமசாமி , தி.மு.க. சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் தியாகராஜன்.

சூலூர் தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி வினோஜ் குமார், இளைஞர் அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ரங்கசாமி, சன்முகம்,இருதயசாமி,கார்த்தி, ஆறுமுகம், மற்றும் வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News