உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை, அய்யலூர் பகுதியில் பதுக்கி விற்கப்படும் ரேசன் அரிசி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Published On 2022-12-15 12:35 IST   |   Update On 2022-12-15 12:35:00 IST
  • பைக், கார்களிலும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.
  • ரேசன் அரிசி கடத்துவோர்க்ள மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து இலவச அரிசி வாங்கும் சிலர் அதனை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களிடமிருந்து பெறப்படும் ரேசன் அரிசியை மறுசுழற்சி செய்து விற்பனை செய்கின்றனர்.

ஒரு கிலோ ரூ.5-க்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பைக், கார்களிலும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரேசன் கடையில் வேலை செய்யும் நபர்கள், அரசு அலுவலர்கள் இதற்கு உடந்தையாக உள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணித்து ரேசன் அரிசி கடத்துவோர்க்ள மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News