உள்ளூர் செய்திகள்

கோ-கோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை படத்தில் காணலாம்.


சரக அளவிலான கோ-கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-09-03 10:04 GMT   |   Update On 2023-09-03 10:04 GMT
  • சரக அளவிலான கோ-கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
  • பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடமும், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடமும், பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் சங்கீதா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News