உள்ளூர் செய்திகள்

புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம்

Published On 2022-09-03 09:54 GMT   |   Update On 2022-09-03 09:54 GMT
  • கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் திருப்பலி நிகழ்ச்சி புனித அந்தோனியார் ஆலய திருத்தலத்தில் நடைபெறுகிறது.

வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

14-ந் தேதி பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோனி சாமி தலைமையில் திருப்பலி திருவிழா நடைபெறுகிறது.

அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News