உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

காந்திஜெயந்தியை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே பேச்சு போட்டிகள்

Published On 2022-09-29 06:28 GMT   |   Update On 2022-09-29 06:28 GMT
  • காந்திஜெயந்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.
  • அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

காந்திஜெயந்தி வருகிற 2ம் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது. அதன்படி 12ம் தேதி தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை ப்பள்ளியில் (ஆண்கள்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 10 மணி முதல் சமூக இடை வெளியுடன் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன. இப்போட்டி களில் மாவட்ட த்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்துக்கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிக்கு "அண்ணலின் அடிச்சு வட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்" எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களு க்கான பேச்சுப்போ ட்டிக்கு"வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கை யும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை" எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்ப வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ ர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்ற றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரி யர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளி தரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News