உள்ளூர் செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம்

Published On 2022-10-01 10:46 GMT   |   Update On 2022-10-01 10:46 GMT
  • தபால்துறை சார்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் செயபடுத்தப்படுகிறது.
  • இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

சேலம்:

தபால் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி சேலம் மேற்கு கோட்டம் சார்பில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தபால்காரர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

அதே போன்று 50 வயது முடிந்த பாதுகாப்பு பணியாளர்கள், 55 வயது முடிவடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.1,000-ம் முதல் அதிக பட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மேற்கு கோட்ட தபால் கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News