உள்ளூர் செய்திகள்
புற்றுக்கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெற்ற காட்சி.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை
- கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.
- சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாத கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.
பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.