உள்ளூர் செய்திகள்

பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியதை படத்தில் காணலாம்.


கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு விளக்கு பூஜை

Published On 2022-12-09 08:22 GMT   |   Update On 2022-12-09 08:22 GMT
  • புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
  • மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது ஏற்பாடுகளை வீரவாஞ்சிநகர் திருவிளக்கு பூஜை குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News