உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை தாக்கிய மகன் கைது

Published On 2023-05-01 08:40 GMT   |   Update On 2023-05-01 08:40 GMT
  • சம்பவத்தன்று முத்துசாமி திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • அப்போது ஆத்திரத்தில் அங்கே இருந்த மண்வெட்டியால் சுப்பையாவின் தலையில் தாக்கி அடித்து உதைத்துள்ளார்

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகன் முத்துசாமி (வயது38.) திருமணமாகாதவர். இவருடன் பிறந்த சகோதர- சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் தனக்கு திருமணம் முடித்து வைக்க சொல்லி பெற்றோ ரிடம் வற்புறுத்திய உள்ளார்.

சம்பவத்தன்று அவர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் அங்கே இருந்த மண்வெட்டியால் சுப்பை யாவின் தலையில் தாக்கி அடித்து உதைத்து ள்ளார். இதில் காயமடைந்த சுப்பையா சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்ப ட்டார்.

இது குறித்து குருவம்மாள் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News