உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2022-06-27 09:28 GMT   |   Update On 2022-06-27 09:28 GMT
  • தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்ற விவசாயியை பாம்பு கடித்தது.
  • இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). விவசாயி. சண்முகசுந்தரம் சம்பவத்தன்று சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்றார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News