உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

கூடலூர் அருகே கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது

Published On 2023-07-10 03:14 GMT   |   Update On 2023-07-10 03:14 GMT
  • நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்
  • அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

கூடலூர்:

தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த லோயர்கேம்ப் எல்.எப். ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸபெக்டர் சுப்புலட்சுமியிடம் தகவல் தெரிவித்து ரேசன் அரிசி கடத்திய நபரையும் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News