கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- தாளாளர், முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார்
- பெரியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நினைவுப் பரிசு வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி யில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தாளாளர், முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.ஆரோக்ய பாரதி எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில், கல்லூரி முதல்வர், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் எஸ் ஆறுமுகம் துவக்க உரை யாற்றினார்.
அவ்வமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜதுரை சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.அவர் பேசும்போது, "கல்வி என்பது தனிமனித மேம் பாட்டுக்காக மட்டுமல்லா மல் நாட்டின் வளர்ச்சிக் காகவும் இருக்க வேண்டும்.திடமான சிந்தனைகள், தீவிரப் பயிற்சி, உயர்வான இலக்கு. இவைகளைக் கொண்டு முன்னேற பாடு படுங்கள் " என வாழ்த்தி னார்.
பெரியார் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நினைவுப் பரிசு வழங்கினார். முகாமில் ஆரோக்ய பாரதி அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கெளதம், பேராசிரியர்கள் துறை தலைவர்கள், மாண வர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.