உள்ளூர் செய்திகள்
- கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.
- அனைத்து தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், மருதவள்ளி, உலகேஸ்வரி, ராஜலட்சுமி, அருணாசலம், விக்னேஷ், கலா, ரமேஷ், கருப்பாயி அம்மாள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.