உள்ளூர் செய்திகள்

பெண்கள் கபடி போட்டி

Published On 2023-06-16 13:49 IST   |   Update On 2023-06-16 13:49:00 IST
  • சிங்கம்புணரியில் பெண்கள் கபடி போட்டி நடந்தது.
  • 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தென்னிந்திய அளவில் 3-ம் ஆண்டு பெண்க ளுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. போட்டியில் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசை வென்ற அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணிக்கு ரூ.1 லட்சத்து 70 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசு ரூ.75 ஆயிரத்து 70 கர்நாடகா மாநிலம் மங்களூரு ஆழ்வாஸ் அணிக்கும், 3-வது பரிசு ரூ.50 ஆயிரத்து 70 சிங்கம்புணரி தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிக்கும், 4-வது பரிசு ரூ.25 ஆயிரத்து 70 ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணிக்கும் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த ரைடராக அந்தியூர் சக்தி பிரதர்ஸ் சவுந்தருக்கும், சிறந்த தடுப்பாற்றல் வீராங்கனையாக கர்நாடகா மங்களூரு ஆல்வாஸ் அணியைச் சேர்ந்த விருந்தாவிற்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைத்து அணிக ளுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. புரோ கபடி நடுவர் சிவனேசன் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News