உள்ளூர் செய்திகள்
- தேவகோட்டை அருகே நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
- கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் உள்ள நடுவூர் நாச்சியம்மன் கோவிலில் ஆவணி சுற்றுப் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் பெரியகாரை, அடசிவயல், கள்ளிக்குடி, கோட்டூர், நயினார்வயல், நாகாடி, திருமணவயல், பாவனக்கோட்டை, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.