உள்ளூர் செய்திகள்

புதிய மின்மாற்றியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-06-16 13:42 IST   |   Update On 2023-06-16 13:42:00 IST
  • புதிய மின்மாற்றியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • நிழல் குடை அைமக்கும் பணிக்கான பூமிபூஜை தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய மின்மாற்றியின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. திருப்புவனம்புதூர் பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக் கப்பட்டு, அதன்மூலம் சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் செயல்பாட்டை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், தி.மு.க. நகரச் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பையா, வார்டு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மணலூரில் ரூ.ய10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழல் குடை அைமக்கும் பணிக்கான பூமிபூஜை தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

Tags:    

Similar News