உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு மேஜை, நாற்காலியை மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள்

Published On 2022-06-24 08:29 GMT   |   Update On 2022-06-24 08:29 GMT
  • காரைக்குடி தொகுதியில் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.51.75 லட்சம் மதிப்பீட்டில் காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள்,நாற்காலிகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.

சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயல் உயர்நிலைப் பள்ளி,சாக்கோட்டை சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடிகழனிவாசல் நகர்மன்ற நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி வ.உ.சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி ராமநாதன் செட்டியார் தொடக்கப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை ப்பள்ளி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலா ரூ. 9.75 லட்சம் மதிப்பிலும் டெஸ்க்,பெஞ்சுகளை வழங்கினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது காந்திபுரம் முதலாவது வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

இதில் நகர்மன்ற உறுப்பினர் மெய்யர்,காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி,நகர செயலாளர் குமரேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ்,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன்,நகர வர்த்தக காங் தலைவர் ஜெயப்பிரகாஷ், தொகுதி இளைஞரணி பொதுச்செயலாளர் பாலா,மாநில இளைஞர் காங் பொதுசெயலாளர் அருணா,தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மணி மற்றும் தலைமை

ஆசிரியர்கள் ஆசிரியர்கள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News