உள்ளூர் செய்திகள்

உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதி

Published On 2023-01-31 08:27 GMT   |   Update On 2023-01-31 08:27 GMT
  • தேவகோட்டையில் உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
  • மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் தேவகோட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. மாலையில் பள்ளி முடிந்து தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு செல்ல 4.30 மணிக்கு '3 ஏ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக மாணவ-மாணவிகளை புறக்கணிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசு பஸ் முன்கூட்டியே 4.15 மணிக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவ-மாணவிகள் நிலையை கருத்தில் கொண்டு பள்ளி முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News