உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. 

சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்

Published On 2022-09-14 08:28 GMT   |   Update On 2022-09-14 08:28 GMT
  • சிவகங்கையில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
  • இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை குறித்து மாதந்தோறும் சம்பந்தப்பட்ட துறைகள் முதன்மை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.

இதில் ஆக்கி ரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், 64 கோவில்கள் பட்டியலினை சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி நிரந்தர தீர்வு காணவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்க ளின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்ளிட்ட மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும், பதிய ப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அலுவலர்ளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா, (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News