உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

Published On 2023-06-06 08:38 GMT   |   Update On 2023-06-06 08:38 GMT
  • மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
  • இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

மானாமதுரை

மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.

Tags:    

Similar News