உள்ளூர் செய்திகள்

சபரி சாஸ்தா பஜனை குழுவினர் அன்னதானம்

Published On 2023-01-01 13:53 IST   |   Update On 2023-01-01 13:53:00 IST
  • சபரி சாஸ்தா பஜனை குழுவினர் அன்னதானம் வழங்கப்பட்டது.
  • சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி சபரி சாஸ்தா பஜனைக் குழுவின் 26ம் ஆண்டு அன்னதானம் நடந்தது. இந்த குழு சார்பில் கார்த்திகை முதல் தேதியில் இருந்து தினமும் பஜனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் தேவகோட்டை நகர் மற்றும் கண்டதேவி, ஆறாவயல், சித்தானூர், பெரியகாரை, கோட்டூர் காவனவயல், உடப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News