உள்ளூர் செய்திகள்

தேவகோட்டையில் நாளை மின்தடை

Published On 2022-11-14 08:59 GMT   |   Update On 2022-11-14 08:59 GMT
  • தேவகோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
  • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News