உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

Published On 2022-12-02 07:38 GMT   |   Update On 2022-12-02 07:38 GMT
  • திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
  • மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.

Tags:    

Similar News