உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

Published On 2022-11-17 06:53 GMT   |   Update On 2022-11-17 06:53 GMT
  • சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
  • கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.

இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News