உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்.

முளைப்பாரி திருவிழா

Published On 2022-08-11 08:14 GMT   |   Update On 2022-08-11 08:14 GMT
  • மானாமதுரை அருகே முளைப்பாரி திருவிழா நடந்தது.
  • இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெரிய கோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க தொடங்கினர்.

தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மிபாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர்.

மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முளைப்பாரிகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக சுமந்து கொண்டு கைலாசநாதர் கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோவில்களில் இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.

Tags:    

Similar News