உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

Published On 2022-11-29 13:03 IST   |   Update On 2022-11-29 13:03:00 IST
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சித்துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
  • இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி துறையின் சார்பில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த முகாமில் பங்கேற்றனர். சிங்கம்புணரி யூனயின் துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை இயக்குநர்கள் ராஜசேகரன், விஜயசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பெரிய கருப்பி முத்தன், சிவபுரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி திரவியம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், முதன்மை மருத்துவ அலுவலர் அயன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, துணை இயக்குநர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் செந்தில்குமார், முத்தமிழ் செல்வி, செந்தில், சித்தா மருத்துவர் சரவணன், எஸ்.புதூர் மருத்துவ அலுவலர் சினேகா, நெற்குப்பை மருத்துவர் இளவதனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

Similar News