உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

Published On 2023-06-21 08:21 GMT   |   Update On 2023-06-21 08:21 GMT
  • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
  • ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் எதிரே ம.தி.மு.க. சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார் பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என ஆர்.என்.ரவி கூறுவதாகவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார் எனக்கூறி ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. நகர செயலாளர் திவான் சக்கரவர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News