உள்ளூர் செய்திகள்

பணித்துறை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பணித்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-06 12:26 IST   |   Update On 2023-09-06 12:26:00 IST
  • பணித்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் அமைந்துள்ள பிர சித்தி பெற்ற பணித்துறை விநாயகர் கோவில் அமைந் துள்ளது. சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமான பணியின் போது இந்த விநா யகர் கோவில் அரசு அலுவ லர்களால் பிரதிஷ்டை செய் யப்பட்டது.

40 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறிய கோவிலாக இருந்ததை அகற்றி ஆகம விதிப்படி புதிதாக கட்டப் பட்டது. கட்டுமானப்பணி கள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட் டன.

பின்னர் மங்கள வாத்தி யங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத் தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப் பட்டது.

தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப் பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News