உள்ளூர் செய்திகள்
- காளையார்கோவில் அருகே, 27-ந் தேதி கொங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆசிரமம் கிராமத்தில் கொங்கேசுவரர் கோவில் உள்ளது.
பிரசித்திபெற்ற 300 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 2 ஆயிரம் பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பது வழக்கம்.
கொங்கேசுவரர், 7 முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது. 30ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கொங்கேசுவரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.